#Breaking அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!

 
admk

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

admk office

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக அலுவலக சீலை அகற்றக் கூறிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க  உத்தரவிட்டது.  

tn

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அகற்றினார். சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகம் கடந்த 11ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத காலத்திற்கு அதிமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் அலுவலகத்திற்குள் வர அனுமதிக்க கூடாது என்றும் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.