இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி..

 
இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி..


 கூடுவாஞ்சேரியில் இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மனைவி சந்திரா.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் சுப்பிரமணி உயிரிழந்துவிட்ட நிலையில்,   72 வயதான சந்திரா  தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார்.  சந்திராவுக்கு அடிக்கடின் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது.  அந்தவகையில் நேற்று காலை  வழக்கம் போல,  சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சந்திரா சென்றுள்ளார்.  

இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி..

பின்னர் காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு-  தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.  இந்த தகவல்   நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் மூலமாக தெரியவந்ததை அடுத்து,   சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக, உறவினர்கள் கருதி உள்ளனர். காவல்துறையினர்  உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் ரயில்வே காவல்துறையினரும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்,  உருவம்  ஒத்துபோனதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேலுவும்  உறுதி செய்துள்ளார்.  இதனையடுத்து மூதாட்டியின் உடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  உறவினர்கள் சூழ முறைப்படி சந்திராவுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.   ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு,  தாரை தப்பட்டையுடன் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது.  

இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி..

இந்த நிலையில் இன்று காலை, மரபுப்படி  சந்திராவிற்கு  படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும்,  உறவினர்கள் அனைவரும்  பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சந்திரா இல்லை என்பதை உறுதிப்படுத்திய உறவினர்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து ரயிலில் அடிபட்டு  உயிரிழந்து  தகனம் செய்யப்பட்ட  மூதாட்டி யார் என்பது குறுத்து தாம்பரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.