மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

 
Thirumagan last funeral

மாரடைப்பால் மரணமடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், காந்தி, மதிவேந்தன, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் நேறில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி. ஜோதிமணி மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். செல்லும் வழிநெடுகிலும் அவரது உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருங்கல்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட உள்ளது.