அரசுப் பேருந்தில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்ட நடத்துனர்! குடிபோதையில் இருந்ததால் ஆத்திரம்

 
bus

அரசுப் பேருந்தில் குடிபோதையில் பயணம்  செய்த நபரை நடத்துனர் பேருந்தில் இருந்து  கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செய்யாறு சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக  பணிபுரிபவர் பிரகாஷ்,  இவர் 477 என் கொண்ட  அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்த அரசுப் பேருந்து வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர்  சென்று மீண்டும் வந்தவாசிக்கு இரவு சுமார் 11 மணியளவில் பழைய பேருந்து நிலையம்  வந்தது.

அப்போது அந்த  அரசுப் பேருந்தில் குடிபோதையில்  ஒரு நபர் பயணம் செய்துள்ளார். அந்த நபரை அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவர் பேருந்தில் இருந்து கீழே  இறங்க சொல்லி  இருக்கிறார்.  ஆனால் அவர் கீழே  எறங்கவில்லை.  அப்போது திடீரென அந்த நபரை நடத்துனர் பிரகாஷ்  பேருந்தில் இருந்து  கீழே தள்ளி உள்ளார். அப்போது அந்த நபர் சாலையில்   அப்படியே இருந்தும் இதை பார்க்காமல் பேருந்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருவதால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.