#Breaking ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!

 
பெண்கள் இனி ‘மேக் அப்’ போடத்தான் இருக்கணும்-2.5 லட்சம் சிசிடிவி கேமராவுக்குள்  சென்னை- பெண்கள் பாதுகாப்பில் EPS பெருமிதம்

டெண்டர் முறைகேடு வழக்கில்  எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

edappadi palanisamy

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் ரூ. 4,800 கோடி ஊழல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மற்றும் அறப்போர் இயக்கம்  கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில்,  2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.  அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போது மீண்டும் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது 

இந்நிலையில் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை விதிக்க உயர் நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது.  அவதூறாக செய்தி வெளியிட தடை விதிக்கக்கோரியும், ஏற்கனவே வெளியிட்டதற்காக ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு அறப்போர் இயக்கத்திற்கு எதிராக பழனிசாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நஷ்ட ஈடு வழக்கில் அறப்போர் இயக்ககத்திற்கு இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  எடப்பாடி கோரிக்கையின்படி அறப்போர் இயக்ககத்திற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்  நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து பதிவிட்டால் நீதிமன்ற கவனத்திற்கு ஈ பிஎஸ் கொண்டு வரலாம் என்று கூறியுள்ளது. 

Madras Court
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் தனக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை கோரி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதிக்க மறுத்து, அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,  விசாரணையை ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைத்து.