தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - 17 காளைகளை பிடித்த யோகேஸ்வரனுக்கு பைக் பரிசு

 
thachangurichi Jallikattu

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 17 காளைகளை பிடித்த திருநல்லூர் யோகேஸ்வரன் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  இந்த  ஜல்லிக்கட்டு போட்டியினை  அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து  தொடங்கி வைத்தனர். இந்தா ஜல்லிக்கட்டில் 485 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் காளைகள் மற்றும்  வீரர்களுக்கு இருசக்கர வாகனம், குக்கர், கட்டில் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை எராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர். 

போட்டியின் முடிவில் அதிகபட்சமாக 17 காளைகளை பிடித்த திருநல்லூர் யோகேஸ்வரன் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசான பைக் வழங்கப்பட்டது. இதேபோன்று, தஞ்சை மருதகுடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பைக் பரிசு அளிக்கப்பட்டது.  ஜல்லிக்கட்டு போட்டியில் 3 போலீசார் உட்பட மொத்தம் 70 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் பலத்த காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன.