எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று மீண்டும் விசாரணை!!

 
EPS

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூபாயை 4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கடந்த 2018 ஆம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் . வழக்கை விசாரணை நீதிபதி வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டார்.  சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது .

ep

எடப்பாடி பழனிசாமியின் மனு விசாரித்த நீதிபதிகள்  2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.  அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.  4ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்  ஆகஸ்ட்  2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். 

supreme court

இந்நிலையில்  எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  நெடுஞ்சாலை பணிக்கான டெண்டரில் ரூபாய் 4800 கோடி  முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை  தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.