மாணவர்களுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர்: போக்சோவில் கைது..

 
கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளியில் ஆபாச படம் நடத்தியதாக எழுத குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர்: போக்சோவில் கைது..

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  அங்கு 11  மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு   அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரிபவர்  கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு ஆபாச பாடம்  நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.   இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில்,   இது குறித்து சில மாணவிகள் குலைச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால்  ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 ஆசிரியர் கைது

இதனைத் தொடர்ந்து கடந்த 6 ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்,  தலைமை ஆசிரியரின் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து  தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள், நிகழ்விடத்திற்கு வந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்திருக்கார். ஆனால் அதன்பிறகும்  ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்  நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்  போக்சோ உள்ளிட்ட 2  பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து,  குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினர்  ஆசிரியரை  கைது செய்துள்ளனர்.