தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!!

 
ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.

rn ravi

 பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார். சட்டப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர்.  இந்நிலையில் திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி. டெல்லி செல்கிறார். 

tn

இந்த பயணத்தின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பார்  என்று கூறப்படுகிறது.  இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.  முன்னதாக தமிழ்நாடு  சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு , திமுக எம்பிக்கள் வில்சன் மற்றும் என். ஆர். இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  நேற்று சந்தித்து பேசினர்.அப்போது அவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கியதாக தெரிவித்தனர்.