சென்னையில் மரம் விழுந்து இளைஞர் பலி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 
stalin

சென்னை அயனாவரத்தில் இளைஞர் ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

சென்னை அயனாவரம் அருகே சாதிக் பாஷா என்பவர் மரம் விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 03ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, அயனாவரம் வட்டம், பெரவள்ளூர் கிராமம், ஜி.கே.எம். காலனி, 26-வது கென்னடி தெருவைச் சேர்ந்த சாதிக் பாஷா (வயது54) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி 3.1.2023 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.