ஜன.15ல் நடைபெறும் SBI தேர்வு தேதியை மாற்றுக..- நிர்மலா சீதாராமனுக்கு , தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம்...

 
தமிழச்சி தங்கபாண்டியன்


பொங்கல் நாளன்று  நடைபெற இருக்கும் SBI தேர்வு தேதியை மாற்றி,  புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் SBI க்ளெர்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு அண்மையில் நடந்து முடிந்தது. அதற்கான முடிவுகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில், அப்பணிக்கான முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி 15ம் தேதி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தைப்பொங்கல்  கொண்டாடப்படுகிறது.  இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த தேர்வு தேர்தியை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

exam

அந்த கடிதத்தில், தமிழ் சமூகம் கொண்டாடும் அறுவடைத் திருநாள் தான் பொங்கல் பண்டிகை  என்றும், இதனை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம் என்று தமிழர்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15ம் தேதி எஸ்பிஐ வங்கி முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;  இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் திணறி வருகின்றனர். ஆகையால் தேர்வு தேதியை மாற்றி,  புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.