தமிழகத்தில் 14ஆம் தேதி வரை கனமழை பெய்யும்

 
r

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

 வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி அன்று தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரியில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த தாற்றலுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

rrrr

 அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் வட மேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.  இது அடுத்த கட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள் தான் கணிக்க முடியும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

 நாளை மறுநாள் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது . 10ஆம் தேதி விழுப்புரம். செங்கல்பட்டு. கடலூர். மயிலாடுதுறை .தஞ்சாவூர் .நாகப்பட்டினம் .திருவாரூர். புதுக்கோட்டை .ராமநாதபுரம் மாவட்டங்களில் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழையை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.