மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..

 
 சூறாவளி

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.   

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.     தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.    காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 20ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகையால்,  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் அந்தமான் கடல் பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  வானிலை மையம் அறிவித்திருக்கிறது.    இந்நிலையில்  நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இணை இயக்குநர் மற்றும்  துணை இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை பிறப்பித்திருக்கிறார்.   வரும் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.    காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 20ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகையால்,  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் அந்தமான் கடல் பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  வானிலை மையம் அறிவித்திருக்கிறது.  

தமிழக மீனவர்கள்

இந்நிலையில்  நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.   ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இணை இயக்குநர் மற்றும்  துணை இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை பிறப்பித்திருக்கிறார்.   வரும் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.