#BREAKING: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

 
tnpsc

அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களில் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது.  குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. டிஎன்பிஎஸ்சி குருப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது. .

இந்நிலையில், அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.