11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் சைக்கிள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

 
cycle

தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி இன்னும் 3 மாதத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2001-2002 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திய நிலையில், தொடர்ந்து இந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை இலவச சைக்கிள் வழங்கப்படாத நிலையில், இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி இன்னும் 3 மாதத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளது.

Tamilnadu arasu

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர்கள்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய 03.03.2022 அன்று ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.