மியான்மரில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 
stalin

மியான்மரில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவகிறது. ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருவந்துள்ளது.  மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.  அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர்.

Modi - NITI Aayog

மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டை கோருகிறேன். இவ்வாரு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.