ஆ.ராசாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது - அண்ணாமலை

 
annamalai

ஆ. ராசாவின் பேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

மதுரையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக எம்.பி ஆ. ராசாவின் பேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது.  வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மீண்டும் அதேபோன்ற கருத்துகளை ஆ.ராசா பேசி வருகிறார். தமிழக சகோதரிகளின் மனதை புண்படுத்தும் வகையில் ஆ.ராசா பேசி வருகிறார். காலங்களை கடந்து அழிவை சந்திக்காத தர்மம்.. அனைவருக்கும் மோட்சம் கிடைக்கட்டும் என்பது இதன் குறிக்கோள். அதனால்தான் தான் கடைசிக்காலத்தில் கருணாநிதியே ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 
சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதத்தில் எந்த கொள்கையும் கிடையாது. எங்கே இருந்து புதுப்புது கருத்துகளை கொண்டு வந்து, தனித்தமிழகம் என்ற எல்லையை நோக்கி செல்கிறார். ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் வழக்கு புனைந்து கைது செய்யப்படுகிறார்கள். ஆ.ராச பேச்சால் சமுதாயத்தில் பிளவு எற்படாதாம், அதனை கண்டித்து பேசினால் பிளவு ஏற்படுமாம், வேடிக்கையாக இருக்கிறது. சர்ச்சை பேச்சுக்களால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.