அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

 
rain

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Heavy rain lashes Chennai- The New Indian Express

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த மூன்று மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.