எமது கோரிக்கை வெற்றி; எமது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நியதிக்காக நன்றி!!
தமிழகத்து நியாயம் வழங்கியமைக்காக அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். முருகையா அவர்களிடம் இருந்து மே 11, 2022 அன்று கடிதம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச்சினை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை குறிப்பிட்டு நான் 29.06.2021 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.
அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 வெளியிட்டு இருந்த அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வுக்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 6 மையங்களில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை ; தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டி இருந்தேன்.
எமது கோரிக்கை வெற்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 14, 2022
அணுசக்தி துறை,
கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது.
கடுமையாக எதிர்த்தேன்.
இந்த ஆண்டு தூத்துக்குடி வளாகத்திலேயே தேர்வு மையம் அமைத்து, நேர்காணலும் நடத்தி முடித்துள்ளது.
எமது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நியதிக்காக நன்றி. pic.twitter.com/JCp8CafWMY
எமது கோரிக்கை வெற்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 14, 2022
அணுசக்தி துறை,
கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது.
கடுமையாக எதிர்த்தேன்.
இந்த ஆண்டு தூத்துக்குடி வளாகத்திலேயே தேர்வு மையம் அமைத்து, நேர்காணலும் நடத்தி முடித்துள்ளது.
எமது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நியதிக்காக நன்றி. pic.twitter.com/JCp8CafWMY
உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா?தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு வந்துள்ள பதில்தான் திருமிகு முருகையா அவர்களின் கடிதம் (Ref no. R1-14-1/2021/R-1/1062). அவர் தெரிவித்துள்ள செய்தி இது. "Techinical officer/D/Advt no NFC/01/2022 பதவிக்கான அறிவிக்கைக்கான தேர்வு மையம் ஜிர்கோனியம் வளாகம், பழைய காயல், தூத்துக்குடி மாவட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் மே 5-7, 2022 தேதிகளில் அணு எரிபொருள் வளாகத்தால் நடத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்"_ ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்சனைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.