என்.எல்.சியில் நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்..

 
என்.எல்.சியில் நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்..

 தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி  செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு,  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார்.

என்.எல்.சியில் தமிழகர்கள் புறக்கணிப்பு : திமுக கண்டனம்..

 இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என  உத்தரவிட வேண்டும்  என்றும் வலியுறுத்தினார்.  

ஸ்டாலின்

 மேலும் இதுகுறித்து  2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில்  பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்  கடிதம் எழுதியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.