தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!!

 
TN

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN 

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது மீனவர்களை,  எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.  இந்நிலையில் எல்லைத் தாண்டி மின்பிடித்ததாக கூறி  நெடுந்தீவு அருகே தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விசைப்படகுடன் காரைநகருக்கு  8 மீனவர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

arrest 

முன்னதாக மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க சென்ற 10 இந்திய மீனவர்களை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட மீனவர்களை கடந்த 6ஆம் தேதி திருகோணமலை நீதிமன்றம்  விடுதலை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.