பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்..

 
BUS

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக,  நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  சென்னை மற்றும் பிறநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களில், சொந்தபந்தங்களுடன்  பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர்.  இதனை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து துறை சார்பில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை  3  நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து மூன்று நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  

bus

நாளை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும்,  பிறநகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும்,  இதே போல் நாளை மறுநாள் 13 ஆம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 1,805 சிறப்பு பேருந்துகளும்,  மற்ற நகரங்களில் இருந்து 2,214 பேருந்துகளும் , அதேபோல்  14ஆம் தேதி சென்னையில் இருந்து 1,943 சிறப்பு பேருந்துகளும் , மற்ற இடங்களில் இருந்து 2,461 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றது.

சென்னையில் கோயம்பேடு, கே கே நகர், மாதவரம், தாம்பரம்  சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம்,  பூந்தமல்லி ஆகிய ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக,  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாணவர்கள் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களும்,  tnstc செயலி மற்றும் www.tnstc.in என்கிற இணையதளம் ஆகியவற்றின் மூலமாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

omni bus

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள 94450 14 450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து  புகார்களை தெரிவிக்க 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பும் பட்சத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..