தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்.. இன்று சோதனை ஓட்டம்..

 
 தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்..  சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது..

சென்னை-மைசூர் இடையிலான தென்னிந்தியாவின் முதல்  வந்தே பாரத் ரயிலின் முன்னோட்டம்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை தொடங்கியது.

நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில் சென்னை ஐ.சி.எப்.உள்ளிட்ட முக்கிய நகரங்களில்  உள்நாட்டிலேயே  தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரயிலில்  பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டிவிடுமம் வல்லமை கொண்ட வந்தே பாரத் ரயில்,  அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.

 தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்..  சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது..

முழுவதும் குளிரூட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத்  ரயில்கள், ஏற்கனவே  புதுடெல்லி-வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் அம்ப் அந்தாரா – புதுடெல்லி என 4  வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.  அதன்படி தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலும், இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில்  சென்னை - பெங்களூரு - மைசூரு இடையே இயக்கப்பட உள்ளது. இதனையொட்டி  இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து   சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான சோதனை  ஓட்டம்  தொடங்கி வைக்கப்பட்டது. தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இதனை  தொடங்கி வைத்தார். சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூருக்கு இயக்கப்பட்டது.

இந்த வந்தே பாரத் ரயில்  நவம்பர் 10ம் தேதி முதல் சென்னையிலிருந்து இயக்கப்படும் என கூறப்படுகிறது.  சென்னை - மைசூரு   வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீட்டர் ஆகும்.   இந்த நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் 27  வந்தே பாரத்  ரயில்களை  தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிக வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும் படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்படும் என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.