முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் சோனியா காந்தி..

 
முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்  சோனியா காந்தி..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ்  தலைவர்  சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார்.

ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து  ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாகவும்,  விரைந்து குணமடைந்து வருவதாகவும் காவேரி  மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.   

சோனியா காந்தி

இதையடுத்து அவரது உடல் நலம் குறித்தும்,  அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.  இந்நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  முதலமைச்சர்  மு.க ஸ்டாலினிடம்,  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  தொலைபேசியில் தொடர்புகொண்டு  உடல் நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.  அவரது   உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்ததாகவும்,  மேலும் அவர் விரைந்து நலம்பெற வேண்டும் என சோனியா காந்தி   வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.