சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்.. 8 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் விடுதலை..
பாலியல் வழக்கில் சிறையில் இருந்து வந்த சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால் சிவசங்கர் பாபா விடுதகையாகிறார்.
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டவர் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது 8 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவற்ரில் 7 வழக்குகளில் ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார். செங்கல்பட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இந்த வழங்க்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
மீதமுள்ள ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகளுடன் பாஸ்போட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தாமல், தமிழகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.. இருந்தபோதிலும், 8 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால், விடுதலையாகிறார். விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.