முடியாது என்று சொன்ன சவுக்கு சங்கர்- கறார் காட்டிய நீதிபதிகள்

 
s

எந்த பதிவையும் பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்தால் கால அவகாசம் வழங்கப்படும் என்று நீதிபதிகள் சொல்ல,  அதற்கு சவுக்கு சங்கர் மறுப்பு தெரிவித்ததால் ஆறு  வார கால அவகாசம் வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.

 ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று youtube இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சவுக்கு சங்கர் கூறியிருந்ததாக அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன்,  புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது .  விசாரணைக்காக நேரில் ஆஜரானார் சவுக்கு சங்கர்.

ma

 விசாரணையின் போது தான் பேசிய வீடியோ பதிவு,  தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார் . அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள்,  வீடியோவை வெளியிட்டது பேசியது நீங்கள்.. உங்களுக்கே அவற்றின் நகல் தேவையா என்று கேள்வி எழுப்பினர்.    ஆம் தேவை என்று சவுக்கு சங்கர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

 இதை அடுத்து வீடியோவின் நகல்களை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தொடர்ந்து சங்கர் தரப்பில் வாதாடிய போது ,  இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. புதியதா பழையதா என்று கேள்வி  எழுப்பினர்.   இதற்கு நீதிபதிகள்,   நீங்கள் பேசியது உங்களுக்கே நினைவில்லையா என்று கேட்டனர்.   அதற்கு,   தான் பல பேட்டிகளை வழங்கி  இருப்பதாகவும்.   அனைத்தையும் நினைவு கொள்ள இயலாது என்பதால் ஆறு வார கால அவகாசம் தேவை என்று கேட்டார் சவுக்கு சங்கர்.

உடனே நீதிபதிகள்,   இது குறித்து எந்த பதிவையும் பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்தால்  கால அவகாசம் வழங்கலாம் என்று தெரிவித்தனர்.  ஆனால் அதற்கு உறுதி வழங்க முடியாது என்று சவுக்கு சங்கர் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டதால்,   6 வார கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகளும் கறார் காட்டினர்.  மேலும் கடந்த வாரங்களிலும் இன்றும் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என்று சவுக்கு சங்கர் குறிப்பிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.   இதை அடுத்து வழக்கின் மறு விசாரணையை  செப்டம்பர் 15 ஆம் தேதி வரை  ஒத்தி வைத்தனர்.