கடல் கொந்தளிப்பு -ராட்சத அலைகள் : தீவிரமடையும் வடகிழக்கு பருவக்காற்று

 
ப்

 தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.   இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் , புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும்,  இதனால் நாளை மறுநாள் கன்னியாகுமரி , திருநெல்வேலி,  தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர்,  காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

செ

 தென்மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் நாளை மறுதினம்  தென்மேற்கு அதை ஒட்டிய மேற்கு வங்க கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் 11ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.  ஆனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் கடலில் கொந்தளிப்பும் அதிக நீரோட்டமும் ஏற்பட்டிருக்கிறது.  வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் சூறாவளி வீசுகிறது.  இதனால் ராமேஸ்வரத்திலும் பாம்பனிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்திருக்கின்றன.   அதிக நீரோட்டமும் உண்டாகி இருக்கிறது.