நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் - சரத்குமார் வரவேற்பு

 
sarathkumar

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார். 

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, சுபரீம் கோர்ட்டுக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் இவர்கள் 6 பேரையும் விடுவித்திருப்பது, பேரறிவாளன் விடுதலையின் போதே எதிர்பார்த்த ஒன்று தான். கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்கனவே எதிர்பார்த்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மனதார ஏற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.