தீபாவளியையொட்டி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை!!

 
crackers

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் 15 நாள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cracker shop

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.    தீபாவளி பண்டிகையின் போது சென்னை தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை ஆடுதோறும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

crackers

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.  அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவுத்திடலில் 55 விற்பனை கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்டாசு கடைகளை அமைக்க உரிமையாளர்களுக்கு சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகளை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.