எஸ்.பி.வேலுமணி வழக்கு - சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!

 
sp velumani

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகள் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ,கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டென்டர்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் கடந்த  2018 ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

velumani

இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணியின் மனுவை, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில்  பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Madras Court

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுவை உடனடியாக விசாரிக்கசென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு மறுப்பு தெரிவித்த நிலையில் முதல் அமர்வு அல்லது 2வது அமர்வே விசாரிக்கலாம் என வேலுமணி தரப்புக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.