தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமலுக்கு வந்தன

 
t

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன  என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா.  அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.   இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் இடைத்தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில்,  தேர்தல் தேதியினை இன்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.   பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

e

 தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும்,  வேப்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ஆம் தேதி  என்றும் அறிவித்திருக்கிறது .   வேட்பு மனுவை பரிசீலனை செய்ய பிப்ரவரி 8ஆம் தேதியும் வேட்ப அணி திரும்பப்பெறும் நாள் பிப்ரவரி 10ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது .

பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்,  மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார் .

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.