8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 குறைப்பு - பயணிகள் மகிழ்ச்சி

 
e

எட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  இது நேற்று முதல் அமலுக்கு வந்திருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ,காட்பாடி, செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 20 ரூபாயாக இருந்தது.  

எக்

 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கின்ற வகையில் இந்த 8 ரயில் நிலையங்களிலும் பத்து ரூபாயாக இருந்த நடைமேடை கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்தியது ரயில்வே நிர்வாகம்.  இந்த நடைமுறை கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து  31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரயில்வே கோட்டகம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவித்திருந்தது.

 பண்டிகை காலம் முடிந்த நிலையில் தற்போது அந்த எட்டு ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணத்தை 10 ரூபாய் குறைத்து இருக்கிறது . 20 ரூபாயாக இருந்த நடைமேடை கட்டணம் இனிமேல் பத்து ரூபாயாக  குறைக்கப்பட்டு  இந்த நடைமுறை நேற்று முதல் தமிழுக்கு வந்திருக்கிறது.  நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் 10 பத்து ரூபாய் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.