சீர்காழியில் ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்..

 
 சீர்காழியில் ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்..


சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது.  இதனால்  குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால்,  சம்பா சாகுபடி பயிர்கள் சேதமடைந்தன.  இதனையடுத்து  பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.  அதன்படி நேற்று  ரூ. 16.16 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

தமிழக அரசு

மேலும்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 நிவாரண உதவி தொகை இன்று முதல்  ( நவம்பர் 24)  அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்திருந்தார்.  அதன்படி இன்று  சீர்காழியில்  99 ஆயிரத்து 518 குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  தரங்கம்பாடியில் 62, 192 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்கும் பணி தொடங்கியது.  மயிலாடுதுறை  சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளின் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.