இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய உறவினர்கள்! கடலூர் அதிர்ச்சி

 
இ

இளம்பெண்ணை ஓட விட விரட்டி அரிவாள் மனையால் வெட்டிய உறவினர்களை கைது செய்துள்ளனர் போலீசார்.   படுகாயம் அடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . சொத்து பிரச்சனை காரணமாக நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 கடலூர் மாவட்டத்தில் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்.   இவரது மனைவி காவேரி(வயது33).   இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கணவர் முருகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னாள்  உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.   இதன் பின்னர் தனது குழந்தைகளுடன் அதே கிராமத்தில் வசித்து பெட்டிக்கடை நடத்தி வந்திருக்கிறார் காவேரி.

அ

 இந்த நிலையில் காவேரிக்கும் அவரது கணவர் முருகனின் சகோதரன் சகோதரி செல்வி ஆகியோருக்கும்  சொத்து பிரச்சனை இருந்து வந்திருக்கிறது . காவேரியை வீட்டை விட்டு துரத்திவிட்டு சுப்ரமணியனும் செல்வியின் குடும்பத்தினரும் வசித்து வந்திருக்கிறார்கள் அந்த வீட்டில்.  

 இதனால் காவேரி கடலூர் எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார் .  காவேரி அளித்த அந்த புகாரின் பெயரில் ஆவினங்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்து அனுப்பிருக்கிறார்கள்.  

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.   ஆனாலும் அடிக்கடி இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   இந்த தகராறில் ஆத்திரமடைந்த செல்வியின்  கணவர் திருமுருகன் வீட்டில் இருந்து அருவாள் மனைவியை எடுத்து வந்து காவேரியை வெட்டி இருக்கிறார்.  அதில் வெட்டுபட்ட காவேரி தப்பி ஓடி இருக்கிறார்.   அவரை ஓட ஓட துரத்தி வெட்டி இருக்கிறார்கள்.

 இதில் படுகாயம் அடைந்து கிடந்த காவேரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  ஒரு சிலர் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் பதிவேற்றியதால் அது வைரலாகி வருகிறது.

 காவேரியை தாக்கிய உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆவினங்குடி போலீசார்.