சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும்

 
c

நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.  நாளை மறுதினம் 11ம் தேதி இதனால் மிக கனமழை பெய்யும் என்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது .

தமிழ்நாட்டில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது.   இதனால் நாளை தமிழகம் ,புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

r

 தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.   இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் , புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும்,  இதனால் நாளை மறுநாள் கன்னியாகுமரி , திருநெல்வேலி,  தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர்,  காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது .

11ஆம் தேதி அன்று திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விழுப்புரம் , கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

 சென்னை. காஞ்சிபுரம். செங்கல்பட்டு. திருவள்ளூர் .ராணிப்பேட்டை .கள்ளக்குறிச்சி. பெரம்பலூர். அரியலூர். திருச்சி. தூத்துக்குடி .கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி இருக்கிறது.