நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாஜக அரசு - ராகுல் காந்தி

 
tn

நடைப்பயணத்தில் நான் பங்கேற்பதில் முரண்பாடு எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டு உள்ளேன். நடைப்பயணம் குறித்து பாஜகவில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாஜக அரசு. வருமானவரித்துறை அமலாக்க துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது . நான் காங்கிரஸ் தலைவராக வரலாமா வேண்டாமா என்பது தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன். என் மனதில் எந்த குழப்பமும் இல்லை.நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் அழகான மொழி ,ஆனால் கற்றுக் கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன் என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர் ,"காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் ஒற்றுமைக்காக இந்த நடை பயணத்தில் பங்கேற்பது எனது கடமை. நடைப்பயணத்தில் நான் பங்கேற்பதில் முரண்பாடு எதுவும் இல்லை"  என்றார்.