மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

 
rn ravi

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன்  சார்பில் 2022 ம் ஆண்டு மாதிரி விசாரணை நீதிமன்ற போட்டிக்கான நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று  சிறப்புரையாற்றினார்.

Image

அப்போது பேசிய அவர், “அடுத்த 25 ஆண்டுகளில் 100 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்திய அரசமைப்பை விட மிக மிக பழமையானது பாரத், அரசியலமைப்பு பாரதத்தை உருவாக்கவில்லை. ஒரே பாரதம், உன்னத பாரம் என்பதை நோக்கியே நம் பயணம்.

கடந்த 20 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. நம் மீதான விருப்பம், சமுதாயத்தின் மீதான விருப்பம், குடும்பத்தின் மீதான விரும்பம் என எல்லாம் மாறிவிட்டது. இளைஞர்களின் பொறுப்பு என்பது வரும் தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது. சட்ட திட்டங்களும் கூட மாற்றத்திற்கான வழிவகுக்கிறது. நாம் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் எவ்வளவோ முன்னேறி உள்ளோம். முன்னேற்றத்திற்கான வழியை எப்போதுமே தேடிக்கொண்டே இருக்கிறோம். கவனத்திற்குரிய தொழில் முறை என்றால் அது மருத்துவ துறையை தான் சொல்வோம். அதே சமயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த துறையை ஆட்டி படைக்கிறது. துல்லியமான செயல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செய்து முடிக்கபடுகிறது.

உங்களின் பங்களிப்பு நீங்கள் எங்கிருந்தாலும் நம் நாட்டிற்கு தேவைப்படுகிறது. நாம் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம், ஆனால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு முன்னேற்றத்தை அளிக்கும். நீதித்துறையில் இளம் தலைமுறையினர் பங்காற்ற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும். உங்களின் கனவுகளையும் நீங்கள் அடைய வேண்டும்” எனக் கூறினார்.