வீடுகளை இடிக்க எதிர்ப்பு - தீக்குளித்த கண்ணையன் உயிரிழப்பு!!

 
tn

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர் ,கட்டபொம்மன் தெரு ஆகியபகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 259 வீடுகள் உள்ளது.  பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில்,  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில்,  கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.  நோட்டீசை மக்கள் வாங்க மறுத்த நிலையில்,  முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பினர்.  மனுக்கள் தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.

tn

வீடுகளை பொதுப்பணித்துறையினர் இடித்தபோது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அத்துடன் அப்பகுதியை சேர்ந்த கண்ணையா என்ற 60 வயது முதியவர் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.  இதையடுத்து அவர் உடனடியாக காப்பாற்றப்பட்டு அப்பகுதி மக்கள் மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  

yn

இந்நிலையில் மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.