புரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்..

 
modi

75வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் ப்ரொஃபைல் பிக்சராக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.     

 

தேசியக் கொடி

பிரதமர் நரேந்திர மோடி  ஒவ்வொரு மாதமும்   கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மனதின் குரல் ( மன் கி பாத் ) எனும்   வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார்.  அந்த வகையில்  ஞாயிற்றுக்கிழமையான  இன்று  91வது வாரமாக பிரதமர்  உரை நிகழ்த்தினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து  75  வது ஆண்டை அம்ருத மஹாவுத்சவமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  இது மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளதை பார்க்க முடிவதாக குறிப்பிட்ட மோடி, பெருமிதமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தைக் காண தான் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.   

புரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்..

மேலும்., சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்கம் வீடுகளில்  தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளை மீண்டும் நினைவுபடுத்தினார்.  அதோடு, நமது தேசியக் கொடியை உருவாக்கிய பிங்லி வெங்கைய்யாவின் பிறந்த தினம் ஆகஸ்ட் 2ம் தேதி என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில்  அன்று முதல்   சுதந்திர தினம் கொண்டாட உள்ள ஆகஸ்ட் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் ( வாட்ஸ் அப் , முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட)  ப்ரொஃபைல் பிக்சராக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.  அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சிக்கு முன்பாக நாம் நமது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அத்துடன்  இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஏதோ ஒரு வகையில் கூடுதல் சிறப்புடன் கொண்டாடியவர்கள் அது குறித்து தனக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.