திருமணமான ஐந்தே மாதத்தில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி - அதிர வைக்கும் ஆடியோ!!

 
tn

சென்னை வேளச்சேரியில் திருமணமான ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்துமதி. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தியாகராய நகரை சேர்ந்த குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு வந்த இந்துமதியை குமரனின் தாயார் ராசி இல்லாதவள், அதிகம் படிக்கவில்லை என்று திட்டி கொண்டே இருந்துள்ளார். அத்துடன்  வரதட்சணை கொடுமையும் செய்துள்ளார்.


மாமியாரின் தொடர் தொல்லையால் விரக்தி அடைந்த இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.  திருமணம் ஆகிய ஐந்தே மாதங்களில்  4 மாத கர்ப்பிணி ஆக இந்துமதி வீட்டுக்கு வந்தது அவர்களது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.  கணவன் தன்னை சமாதானம் செய்து அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து இருந்த இந்துமதிக்கு ஏமாற்றம் மிஞ்சியது.  இதனால் விரக்தியடைந்த இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தற்கொலைக்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்ஸ் அப்பில் தன் சாவுக்கு குமரனின் அம்மா தான் காரணம் , நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று ஆடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார். 

tn
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  திருமணமாகி  ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண்  உயிரிழந்ததால் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.