தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

 
Thermal plant

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால்  840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5-யூனிட்கள் உள்ளது. ஓரு  யூனிட்டில் 210-மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையில் 5-யூனிட்கள் மூலம் மொத்தம் 1050-மெகாவாட் மின்சாரம் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக நிலக்கரி தட்டுபாடு காரனமாக அனல்மின் நிலையத்தில் இருக்கக்கூடிய 5-யூனிட்களையும் தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக 5-யூனிட்கள் முழுமையாக இயக்கப்பட்டு வந்த நிலையில்  மீண்டும் நான்கு யூனிட்கள் நிறுத்தம் செய்யப்பட்டு இன்று காலை முதல்  1-யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தி  செய்யப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்  1,2,3 மற்றும் 5-வது யூனிட் என 4-யூனிட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  840 -மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3-வது யூனிட்டில் மட்டும் 210 -மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

coal

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 80- ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் ஆனால் அதனை வைத்து தொடர்ச்சியாக 5-யூனிட்களை இயக்க முடியாத காரணத்தால் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பு வரும் வரையில் 1-யூனிட்டினை மட்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக அனல்மின் நிலைய  அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.