இன்று முதல் முழு ஆண்டு தேர்வு விடுமுறை - பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு!!

 
dpi

1 முதல்9 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை இன்று முதல் தொடங்கும் நிலையில் பள்ளிகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

school
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  அதேபோல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.  பதினோராம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் , 10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

school
இந்நிலையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.  அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 

school

கோடை விடுமுறை முடிந்த உடன் அடுத்த மாதம் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை 2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.  ஏற்கனவே ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் , புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.