ஆவின் பணியாளர்கள் 27,189 பேருக்கும் பொங்கல் போனஸ் - அமைச்சர் நாசர் தகவல்..

 
ஆவின் பணியாளர்கள்  27,189  பேருக்கும் பொங்கல் போனஸ் - அமைச்சர் நாசர் தகவல்..

ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்  என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து, சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது, ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகைகள் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.  ஆவினில் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் பால் வகைகளை அறிமுகப்படுத்தியது போன்று,  கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்தார்.

aavin
வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், சேவை நோக்கத்துடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3,200 டன் அளவுக்கு இனிப்புகள்  தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,  ஆவினில் குளிர்பானங்களை கொண்டு வரும் திட்டமும் இருப்பதாகவும்  அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்றும்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் 27,189 பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி போனஸ் ஊக்கத்தொகையாக  வழங்கப்படும் என்றும்  அமைச்சர்.நாசர் தெரிவித்தார்.