பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் - இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

 
train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் அவர்களின் வசதிக்கேற்ப தாம்பரம் -  திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட ஐந்து சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

train

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்  புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும் என்றும் மீண்டும் இந்த ரயில் மறுமார்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு,  மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

அதேபோல் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்றும்,  நாகர்கோவிலில் இருந்து மறு மார்க்கமாக ஜனவரி 16ஆம் தேதி மாலை 5 :10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு தாம்பரத்தில் வந்தடையும். இது தவிர  கொச்சுவேலி -தாம்பரம்,  எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல்,  தாம்பரம் - திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.