பி.எட்., படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த அனுமதி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

 
கல்லூரி மாணவர்கள்

பி.எட். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பி.எட்., படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த அனுமதி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அனுமதி..

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புக்கான சேர்க்கைக்கு   கலந்தாய்வு  நடத்த உயர் கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது.  தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்.,  எம்.எட்., மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகள் உள்ளன.  இதில் தமிழகத்தில் உள்ள  21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கு அரசு சார்பில் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்..
ஆனால் நடப்பாண்டுக்கான  கலந்தாய்வு நடைபெறுவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.  இந்த நிலையில் நேற்று  பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு நடத்த  உயர்க்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. 

கலந்தாய்வு

பி.எட்., கலந்தாய்வு நடத்துவதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளையும்  வெளியிட்டுள்ளது.  அரசின்  இடஒதுக்கீடு  விதிமுறைகளைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை  கலந்தாய்வை  நடத்தக்கோரி  கல்லுாரி கல்வி இயக்குநருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மாணவர் சேர்க்கை விவரங்களை http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும்,   மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.