#BREAKING பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை - விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!!

 
govt

சேலம் - பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை  விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் பலரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

tn

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் , தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை . பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்துப் பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது என்று விளக்கமளித்தார் . 

tn
இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது குறித்து விசாரிக்க, உயர்கல்வித்துறை உயர் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த
நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.