#JustIn கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற பெற்றோர் சம்மதம்!!

 
tn

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

tn

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.  ஆனால் மாணவியின் தந்தை ராமலிங்கம் மூன்று மருத்துவர்கள் மறுபிரத்தின பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும்.  தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிறாத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மாணவியின் தந்தை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தது.  இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்ப அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று இ மனு மீதான விசாரணை நடைபெற்றது.  நீதிபதி கவாய் மற்றும் பி.எஸ். நரசிம்மா அமர்வில் இன்று மனு விசாரணைக்கு வந்த நிலையில் தங்களது தேர்விலான மருத்துவ நிபுணர்களின் நியமிக்க மாணவி தரப்பில் கோரிக்க வைக்கப்பட்டது . இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான் என்றும் , உரிய நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என்றும் மாணவியின் தந்தை ராமலிங்கம் குற்றச்சாட்டினார். 

supreme court

இதையடுத்து நீங்கள் ஏன் உயர் நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே ? உயர் நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  வழக்கை திரும்ப பெற்று உயர் நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்ற கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் வழக்கை திரும்ப பெற்றார். இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு வீட்டில் போலீசார் நோட்டு நோட்டீஸ் ஒட்டிய நிலையில் மாணவியின் உடல் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.