சோனியா காந்தியின் தாயார் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

 
tn

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ  இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 27ஆம் தேதி அவர் உயிரிழந்தார். 90 வயதான அவர் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டார் சோனியா காந்தி .அவருடன் மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். இதை தொடர்ந்து  கடந்த 27ஆம் தேதி சோனியா காந்தியின் தலைவர் பாவ்லா மைனோ இத்தாலியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.

tn

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்கள் அன்புத் தாய் திருமதி பாவ்லா மைனோ காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அவரது  மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழப்பால் துயரப்படும் உங்களுக்கும் ,எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி மற்றும்  பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் இனிய நினைவுகளில் நீங்கள் ஆறுதல் பெறுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.