‘பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும்’ - மகனுக்காக மேலிடத்துக்கு லெட்டர் போட்ட ஓபிஎஸ்..

 
ஓபிஎஸ்

ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.  

சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின்  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதே நாளில்   கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.    இதனைத்தொடர்ந்து  ஓ. பி. ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. இல்லை எனவும்,  அவரது அதிமுக எம்.பி.அந்தஸ்தை ரத்து  செய்யுமாறும் , மக்களவை தலைவர் ஓம்பிர்லாவுக்கு அண்மையில் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.  

  ‘பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும்’ - மகனுக்காக மேலிடத்துக்கு லெட்டர் போட்ட   ஓபிஎஸ்..

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம்  மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு கடிதம்  எழுதியிருக்கிறார்.  அதில், “கடந்த 11-ந்தேதி அதிமுகவின் ஒரு சில பொறுப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால் கட்சிகளின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டேன்
ஓ.ப.ரவீந்திரநாத் குமார், MP

அவர்கள் கூட்டிய சட்ட விரோத கூட்டங்கள், நிகழ்வுகள், கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான கூட்டங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி முதல் நிலை தேர்தல் இருந்து நீக்கி தங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை.
  ‘பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும்’ - மகனுக்காக மேலிடத்துக்கு லெட்டர் போட்ட   ஓபிஎஸ்..

அதனால் அது செல்லுபடி ஆகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திர நாத்தை பொய்யான குற்றச்சாட்டு கூறி நீக்கியதாக தெரிவித்து உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஆதலால் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த தொடர்பு மேற்கொள்ள வேண்டாம், எவற்றையும் நடைமுறை படுத்த வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.