41 உயிர்கள் பலியான பிறகும்... ஆளுநருக்கு அன்புமணி கடும் கண்டனம்!!

 
pmk

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த 30 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் பாலன் பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். 

rummy

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பாலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழும் 41-ஆவது தற்கொலையாகும். இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.



அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது  பெரும் சோகமாகும்! 



தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும்! 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!என்று குறிப்பிட்டுள்ளார்.